பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை  16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது!
தேசம்

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது!

காமதேனு

தென்காசி அருகே 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்த நாடார்பட்டி மாயாண்டி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானமுத்து  மகன் அமல்ராஜ்.  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் காளீஸ்வரி வழக்கு பதிவு செய்து அமல்ராஜை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். அவரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT