தேசம்

குட்நியூஸ்... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை!

காமதேனு

ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மக்கள் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே பெற்று வந்தனர். தற்போது ஆயுஷ்மான் பரிசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

செப்டம்பர் 17-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சுகாதார வசதிகளும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT