தேசம்

பாழடைந்த கட்டிடத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

காமதேனு

பாழடைந்த கட்டிடத்தில் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் 30 வயது பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் புறநகரில் உள்ள சூராரம் என்ற இடத்தில் உள்ள சிவாலயா நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் நேற்று மாலை அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸார் வந்த போது 30 வயது பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவரது தலையில் கூரிய பொருளால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. அவர் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," உள்ளூர் பகுதிகளில் காணாமல் போன பெண்களின் பட்டியலை எடுத்து விசாரித்து வருகிறோம். அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். அத்துடன் வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு இந்த பாழடைந்த கட்டிடத்தில் அவரது உடல் வீசப்பட்டிருக்கலாம். எனவே, இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT