தேசம்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

காமதேனு

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு, இன்று முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. குறிப்பாக தீபாவளி அன்று 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கியது. தற்போது, சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்கு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `வரும் 17-ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நாட்களுக்கு முன்னதாக, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT