ஓராண்டாக காத்திருந்து மனைவி இறந்தநாளில் தற்கொலை: குமரியில் சோகம்
ஓராண்டாக காத்திருந்து மனைவி இறந்தநாளில் தற்கொலை: குமரியில் சோகம்  ஓராண்டாக காத்திருந்து மனைவி இறந்தநாளில் தற்கொலை: குமரியில் சோகம்
தேசம்

ஓராண்டாக காத்திருந்து மனைவி இறந்தநாளில் தற்கொலை செய்துகொண்ட கணவன்: குமரியில் சோகம்

காமதேனு

மனைவி இறந்த துக்கத்திலேயே தவித்து வந்தவர் ஓராண்டாகக் காத்திருந்து, மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தேவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பி கண்ணன்(52) தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர் தன் வேலைக்காக நாகர்கோவில், ராணித்தோட்டம் பகுதியில் வசித்து வந்தார்.

தம்பி கண்ணனின் மனைவி ஜூலியட் கில்டா கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல் நலமின்மையால் உயிர் இழந்தார். அதன் பின்னர் தம்பி கண்ணன் மிகவும் வெறுமையாக உணர்ந்தார். அவருக்கு மகன், மகள் என இருபிள்ளைகள் இருந்தாலும் மனைவியின் நினைப்பிலேயே அண்மைக்காலமாக யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.

ஜூலியஸ் கில்டாவுக்கு இன்று முதலாமாண்டு நினைவு தினம் ஆகும். இதனால் கடந்த ஒருவாரமாகவே அவரது நினைப்பிலேயே புலம்பியபடி இருந்த தம்பிகண்ணன் இன்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். நேசமணிநகர் போலீஸார் அவரது உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி இறந்தநாளிலேயே பாசமிகுதியில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT