தேசம்

தூக்கில் தொங்கிய நர்சிங் கல்லூரி மாணவர்: கொலையா தற்கொலையா?

காமதேனு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு என்ற இடத்தில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.  அப்படி தஞ்சையை சேர்ந்த வீராசாமி மகன் சுமித்ரன் (19) என்பவரும் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று வந்தவர் மிகவும் சோகமாக இருந்துள்ளார். இரவு நண்பர்கள் யாரிடமும் சரியாக பேசவில்லையாம். இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபோது அவரை அறையில் காணவில்லை. அதனையடுத்து சக மாணவர்கள் தேடிய நிலையில் விடுதியில் மேல்மாடி சுவரில் இருந்து வெளிப்புறமாக கயிற்றில் தூக்கிட்டு  தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.  கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த களியக்காவிளை போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு வேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார்  மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையாக இருக்கலாமா என்ற கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

SCROLL FOR NEXT