மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்
மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ஓடும் ரயிலை நிறுத்தி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்!
தேசம்

ஓடும் ரயிலை நிறுத்தி கத்தியுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்; பயணிகள் அதிர்ச்சி: பொன்னேரியில் பயங்கரம்

காமதேனு

சென்னையில் புறநகர் ரயிலை நிறுத்தி இருதரப்பு கல்லூரி மாணவர்கள் கத்தியுடனும், கற்களை வீசியும் மோதிக் கொண்டதில் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என முக்கிய கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். அவ்வப்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை நோக்கி சென்ற புறநகர் ரயிலில் ஒருதரப்பு மாணவர்கள் பயணித்த நிலையில் பொன்னேரி ரயில் நிலையத்தில் மற்றொரு தரப்பினர் ரயில் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

இதனால் ரயில் பயணித்த மற்றொரு தரப்பு மாணவர்கள் பெரியகாவனம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மீண்டும் கத்தியுடனும், கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த மோதல் காரணமாக காயமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் அவ்வப்போது மோதி கொள்வதால் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

SCROLL FOR NEXT