ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை
தேசம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை

காமதேனு

அருப்புக்கோட்டை அருகே பள்ளி சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 59 வயது முதியவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள அரசகுளம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (59). கூலிவேலை செய்து வரும் தனசேகரன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்த இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமிகளின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரை தொடர்ந்து தனசேகரனை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனசேகரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

SCROLL FOR NEXT