தந்தையைக் கொலை செய்த மகன்
தந்தையைக் கொலை செய்த மகன்  
தேசம்

தலைக்கேறிய கஞ்சா போதையால் தாக்க முயன்ற தந்தை: ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்ற மகன்!

காமதேனு

கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்த மகனை வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அகரம் பேரூராட்சி டி. அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன்(63), மனைவி பாக்கியத்துடன் அதே கிராமத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு சரவணக்குமார்(20) உள்பட இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மகளுக்கு திருமணமாகி விட்டது.

இதைத்தொடர்ந்து, இரண்டு மகன்களுடன் காளியப்பன் அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். காளியப்பன் கஞ்சா போதையில் அடிக்கடி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் அவர் கஞ்சா போதையில் அவரது மனைவி பாக்கியம் மற்றும் மகன்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவரது மகன் சரவணக்குமார் கத்தியால் தனது தந்தையை சரமாரியாக குத்தியதில் காளியப்பன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்த வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான காவல்துறையினர் தந்தையைக் கொலை செய்த சரவணக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காளியப்பன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT