போக்சோவில் கைது
போக்சோவில் கைது கோடைவிடுமுறைக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: 52 வயது பெரியப்பா கைது
தேசம்

கோடை விடுமுறைக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: 52 வயது பெரியப்பா கைது

காமதேனு

கோடை விடுமுறைக்குச் சென்றிருந்த 15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்த அவரது பெரியப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறைக்கு கோவையில் உள்ள 52 வயதான பெரியப்பா வீட்டிற்கு அச்சிறுமி சென்றிருந்தார். அவரது பெரியப்பா தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில, வீட்டில் நேற்று சிறுமி தனியாக இருந்தார். அப்போது சிறுமிக்கு அவரது பெரியப்பா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

பின்னர் சிறுமி அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது தாயிடம் நடந்தவற்றைக் கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமியின் பெரியப்பாவை நேற்று இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT