வாகனச்சோதனை
வாகனச்சோதனை வாகனத்தணிக்கையில் சிக்கிய குடிமகன்கள்: ஒரு மாதத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல்
தேசம்

வாகனத்தணிக்கையில் சிக்கிய குடிமகன்கள்: ஒரு மாதத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல்

காமதேனு

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 5,738 நபர்களிடம் இருந்து ரூ.5,93,78,500 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக சென்னையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

பணம் இல்லாதவர்களை வழக்குப்பதிவு செய்துவிட்டு அபராதத் தொகையை பின்னர் செலுத்துமாறு அறிவுறுத்தி போலீஸார் அனுப்பி வைத்து விடுகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்காக சிறப்பு மையங்கள் அமைத்து அபராதத் தொகையை வசூலிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சிறப்பு மையங்கள் மூலமாக நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5,93,78,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்வதோடு அவர்களது வீட்டில் இருக்கும் அசையும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT