பாடகர் அபிஷேக் என்ற பாபுல் பிஹாரி
பாடகர் அபிஷேக் என்ற பாபுல் பிஹாரி ஓட்டலில் 13 வயது சிறுமியை பலாத்காரம்: இன்ஸ்டாவில் போட்டோவை பதிவிட்ட பாடகர் கைது
தேசம்

ஓட்டலில் 13 வயது சிறுமியை பலாத்காரம்: இன்ஸ்டாவில் போட்டோவை பதிவிட்ட பாடகர் கைது

காமதேனு

ஹரியாணாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பாடகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரைச் சேர்ந்தவர் போஜ்புரி பாடகர் அபிஷேக் என்ற பாபுல் பிஹாரி(21). இவர் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு ஓட்டலில் 13 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அச்சிறுமியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக போலீஸரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

போஜ்புரி பாடகரான பாபுல் பிஹாரியின் யூடியூப் சேனலை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். சுமார் 600 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் நகரில் பாபுல் பிஹாரி வசித்த போது 13 சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் அந்த சிறுமியை குருகிராமில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாபுல் பிஹாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்துள்ளார்.

பாடகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. இந்த நிலையில், அந்த சிறுமியின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டபோது அதை உறவினர்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியிடம் கேட்ட போது, பாபுல் பிஹாரியால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கிய போலீஸார், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுல் பிஹாரியை கைது செய்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT