அமைச்சர் திருமணம்
அமைச்சர் திருமணம் ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்தார் கல்வி அமைச்சர்!
தேசம்

கல்வி அமைச்சருக்குத் திருமணம்: ஐபிஎஸ் அதிகாரியை மணந்தார்!

காமதேனு

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசின் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவை ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் இன்று திருமணம் செய்து கொண்டார்

ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியிலிருந்து முதல் முறையாக 2022ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரான பெயின்ஸ், தற்போது முதல்வர் பகவந்த் மானின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக உள்ளார். இவருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவுக்கும், நாங்கல் அருகே உள்ள பிபோர் சாஹிப் குருத்வாராவில் சீக்கிய முறைப்படி திருமணம் நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

தொழில் ரீதியாக வழக்கறிஞரான 32 வயதான ஹர்ஜோத் பெயின்ஸ், ஆனந்த்பூர் சாஹிப்பில் உள்ள கம்பீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 2017 தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பெயின்ஸ் முன்பு பஞ்சாப் ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகித்தார். பஞ்சாப் கேடர் ஐபிஎஸ் அதிகாரி யாதவ், தற்போது மான்சா மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் பகவந்த் மான் குர்பிரீத் கவுரை திருமணம் செய்து கொண்டார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நரீந்தர் கவுர் பராஜ் மற்றும் நரிந்தர்பால் சிங் சவானா ஆகியோரும் அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

SCROLL FOR NEXT