தேசம்

சென்னையில் வடமாநில இளைஞர் அடித்துக்கொலை: கைக்குழந்தையுடன் கதறிய உறவுகள்

காமதேனு

சென்னையில் வடமாநில இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கட்டிட வேலைக்கும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பானிபூரி வியாபாரத்திலும் இளைஞர்கள் அதிக அளவில் தொழில் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை கிண்டி மடுவன்கரை மசூதி காலனி பகுதி பானி பூரி கடைக்கு, பீகாரை சேர்ந்த இளைஞர் வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், ஏற்கெனவே கடையில் வேலை செய்து வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராகேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் தாக்கிக் கொண்டுள்ளனர்.

பின்னர் ராகேஷ், தனது செல்போனை காணவில்லை என கூறி பிஹார் இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பிஹார் இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தப்பி ஓடிய ராகேஷை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT