ஜப்பானில் முதலமைச்சர் ஸ்டாலின்
ஜப்பானில் முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பானில் மு.க.ஸ்டாலின்!: திருப்போரூரில் 83 கோடியில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம்
தேசம்

ஜப்பானில் மு.க.ஸ்டாலின்!: திருப்போரூரில் 83 கோடியில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம்

காமதேனு

திருப்போரில் 83 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானில் இன்று கையெழுத்தானது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புதிய தொழில் முதலீடுகளைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி 2024-ல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை தமிழகத்திற்கு கொண்டு வரவும் கொண்டு வரவும் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2024 ஜன. 10 மற்றும் 11- ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்க சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தின் போது 6 முக்கியமான ஒப்பந்தங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.

சிங்கப்பூர் பயணம் முடிந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 53 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குநர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.விஷ்ணு ஆகியோர் கையெழுத்திட்டனர். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் .கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அப்போது உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT