தேசம்

ஆந்திராவில் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா: காரணம் இதுதான்?

எம்.சகாயராஜ்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைத்து அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். அதன்படி, இறுதி அமைச்சரவை இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்ததை தொடர்ந்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.

அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதால் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். அமைச்சரவை மாற்றியமைக்கும் வகையில் புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT