சாலை மறியலில் விவசாயிகள்
சாலை மறியலில் விவசாயிகள் கேரளாவிற்கு கடத்தப்படும் கனிமவளங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்: குற்றாலத்தில் விவசாயிகள் மறியல்!
தேசம்

கேரளாவிற்கு கடத்தப்படும் கனிமவளங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்: குற்றாலத்தில் விவசாயிகள் மறியல்!

காமதேனு

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் குற்றாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கேரளாவிற்குக் கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரி பல்வேறு அமைப்புகள் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள்  குற்றாலம் பகுதியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்திக்கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தென்காசி மாவட்டத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டி கேரளாவிற்கு கொண்டு செல்லும் தமிழக அரசைக் கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை போலீஸார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதால் குற்றாலம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT