தேசம்

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ.11-ம் தேதி வரை கனமழை பெய்யும்

காமதேனு

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.11-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் நவ.11-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.9-ம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும். நவ.10 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசை நோக்கி அது நகரக்கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் நவ.12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT