கேரள சுற்றுலா வாகனம்மோதி குமரி தொழிலாளி பலி வரன் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்: விபத்தில் பறிபோன மகனின் உயிர்: கன்னியாகுமரியில் சோகம்
தேசம்

வரன் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்: விபத்தில் பறிபோன மகனின் உயிர்: கன்னியாகுமரியில் சோகம்

காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள சுற்றுலா வாகனம் மோதி குமரி தொழிலாளி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், முத்தலக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவரது மகன் ஆனந்த்(28) கூலித் தொழிலாளியாக இருந்த இவருக்கு வீட்டில் வரன் பார்த்து வந்தனர். பத்மநாபபிள்ளை நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதிக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் சிலப் பொருள்களை வைத்திருப்பதாகவும், அதை எடுத்துவருமாறும் மகன் ஆனந்திடம் சொன்னார். ஆனந்த் தன் தந்தை சொன்ன பொருள்களை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது களியங்காடு பகுதியில் ஆனந்த் சென்று கொண்டு இருந்தபோது கேரள பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று எதேச்சையாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஆனந்த் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் இன்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT