பெண் குழந்தைகள்  பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி: பள்ளிக்கு செல்வதை தடுக்க நடந்த கொடூரம்
தேசம்

பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி: பள்ளிக்கு செல்வதை தடுக்க நடந்த கொடூரம்

காமதேனு

ஈரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரான் தலைநகரம் டெக்ரான் பகுதியில் உள்ள கோம் பகுதியைச் சேர்ந்த பள்ளிப் பெண்கள் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக ஈரான் அரசு விசாரணை நடத்தியது. அப்போது, பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது என ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் யூனுஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் படிக்கும் பள்ளிகளை மூட வேண்டும் என்ற நோக்கில் சிலர் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT