தேசம்

வாடகை வீட்டில் பாலியல் தொழில்; இளம்பெண்ணை மீட்டது போலீஸ்: விருதுநகர் தம்பதி சிக்கினர்

காமதேனு

விருதுநகரில் வீட்டை வாடகைக்கு பிடித்து இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் கருப்பசாமி நகரில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட வீட்டை போலீஸார் கண்காணித்தனர். அந்த வீட்டில் ஒரு இளம்பெண் மட்டும் தனிமையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

போலீஸார் அப்பெண்ணை கைது செய்து மேலும் விசாரித்தனர். அதில் ஜன.13-ம் தேதி முதல் இந்த வீட்டிற்கு வந்ததும், இவரை விருதுநகரைச் சேர்ந்த கணவன், மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.

அப்பெண் தகவல்படி, விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த சந்திரசேகன் (42), இவரது மனைவி அமல்ராணி (40) ஆகியோர் என தெரியவந்ததையடுத்து விருதுநகர் ஊரக போலீஸார் தம்பதியை கைது செய்தனர்.

மேலும் ஜன.13-ம் தேதி முதல் அந்த இளம்பெண்ணிடம் பாலியலில் ஈடுபட்டோர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதால் முக்கிய பிரமுகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT