தேசம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காமதேனு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 17-ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணைத்தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT