தேசம்

கொலை வழக்குகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கி.மகாராஜன்

‘கொலை வழக்குகளை விசாரிக்க காவல்துறையில் புதிதாக தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி அரியமங்கலத்தை சேரந்தவர்கள் சதீஷ்குமார், சங்கர். இவர்களுக்கு கொலை வழக்கில் திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 2 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு போலீஸாரே விசாரிக்கின்றனர். பணிப்பளு காரணமாக விசாரணையை தொய்வு இல்லாமல் மேற்கொள்ள சட்டம் -ஒழுங்கு போலீஸாரால் முடியவில்லை. இதனால் தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு தொடங்க காவல்துறைக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. இது தொடர்பாக தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.  பின்னர், விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

SCROLL FOR NEXT