தேசம்

நவ.1,3 தேதிகளில் மிகக்கனமழை பெய்யும்: தமிழகத்துக்கு 'ஆரஞ்ச்' அலர்ட்

காமதேனு

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக பெய்த தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ளது. இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் நவ.1 மற்றும் நவ.3 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய கூடும். மேலும், 3-ம் தேதியை அடுத்து தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும். அதன் பிறகு மீண்டும் அதிகரிக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT