கைது
கைது 
தேசம்

ஜாமீனில் வந்தவர் 2 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை: நள்ளிரவில் தூக்கியது போலீஸ்

காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கு ஒன்றில் ஜாமீனில் வந்தவர் தலைமறைவானார். அவரை போலீஸார் இரு ஆண்டுகளுக்குப் பின் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சிரகோடு பெருதிம்புழி பரப்புவிளையைச் சேர்ந்தவர் மது(42). இவர் மீது அப்பகுதியில் உள்ள சிலரிடம் தகராறு செய்ததாக அடிதடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இவர் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவ்வழகில் இருந்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்ததால் நீதிமன்றத்திலும் ஆஜராகிவந்தார். இந்நிலையில் இவ்வழக்கில் ஆஜராகாமல் மது திடீரென தலைமறைவானார்.

வழக்கிலும் ஆஜராகாமல், ஜாமீன் கால அளவும் முடிந்ததால் குழித்துறை நீதிமன்றம் மதுவை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்தது. இரு ஆண்டுகளாகவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த மது, நேற்று நள்ளிரவு தன் வீட்டிற்கு வந்திருப்பதாக மார்த்தாண்டம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் மதுவின் இல்லத்திற்குச் சென்று அவரை அதிரடியாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கைதியை போலீஸார் பிடித்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT