இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை 
தேசம்

நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது!

காமதேனு

இரவு நேரத்தில் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேருந்து ஓட்டுநருக்கு சிறை

சேலத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டிற்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். இரவில் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அந்த பேருந்து வந்த நிலையில் அதில் இருந்து அந்த இளம்பெண் இறங்கி நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதுடன், பேருந்து ஓட்டுநரின் சீண்டல் குறித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த போலீஸார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநரான ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த பிரபாகரன்(51) என்பவரை கைது செய்து அவர் மீது பாலியல் சீண்டல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT