கேரளா ரயிலில் தீவைத்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரிக்கும் காவலர்கள்
கேரளா ரயிலில் தீவைத்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரிக்கும் காவலர்கள் உடனுக்குடன் கசிந்த தகவல்; கேரள ஐ.ஜி சஸ்பெண்ட்: ரயில் பயணிகளை தீ வைத்து எரித்த வழக்கில் அதிரடி
தேசம்

உடனுக்குடன் கசிந்த தகவல்; கேரள ஐ.ஜி சஸ்பெண்ட்: ரயில் பயணிகளை தீ வைத்து எரித்த வழக்கில் அதிரடி

காமதேனு

கேரளத்தில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. 2 வயது குழந்தை உள்பட மூவர் பலியான இச்சம்பவத்தில் வழக்கின் விசாரணையின் போதே தகவல்களை கசியவிட்டதாக கேரள மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த விஜயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

கேரளத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி, ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் பாட்டிலைத் திறந்து பயணிகள் மீது தீ வைத்தார். இச்சம்பவத்தில் உயிருக்குப் பயந்து ரயிலில் இருந்து குதித்த மூவர் உயிர் இழந்தனர். இவ்விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த ஷாருக் ஷெய்பி என்பவர், மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரி பகுதியில் கைது செய்யப்பட்டார். இது தீவிரவாத நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடும் என தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ரகசியமாக வைக்க உளவுத்துறையும் அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் ரத்தினகிரி பகுதியில் ஷாருக் ஷெய்பி கைதானது முதல் அவரை கேரளம் அழைத்துவரும் வழியில் போலீஸாரின் வாகனம் இருமுறை பழுதானது வரை உடனுக்குடன் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் புகைப்படத்துடன் தகவல்கள் வெளியாகி வந்தது. இது ரகசியமாக விசாரிக்க வேண்டிய வழக்கு. அப்படி இருந்தும் தகவல்கள் கசிவது ஏன்? என விசாரிக்க கேரள டி.ஜி.பி அணில்காந்த் உத்தரவிட்டார்.

விசாரணையில் கேரள தீவிரவாத தடுப்புப் படையின் ஐ.ஜியாக இருந்த விஜயன் தகவல்களைக் கசியவிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னரும் இந்த வழக்கின் போக்கு குறித்து தகவல்களைக் கசியவிடும் நோக்கத்தில் ஐ.ஜி விஜயன் விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட வண்ணமே இருந்தார். இதனைத் தொடர்ந்து கேரள டி.ஜி.பி அணில்காந்த், ஐ.ஜி விஜயனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT