கூடாநட்பைக் கண்டித்த வாலிபர் கொலை
கூடாநட்பைக் கண்டித்த வாலிபர் கொலை 'என் அக்காவுடன் தொடர்பு வைக்காதே': கூடாநட்பைக் கண்டித்த வாலிபர் குத்திக்கொலை
தேசம்

'என் அக்காவுடன் தொடர்பு வைக்காதே': கூடாநட்பைக் கண்டித்த வாலிபர் குத்திக்கொலை

காமதேனு

கோவை அருகே கூடாநட்பைக் கண்டித்த வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்துள்ள வேடப்பட்டி நம்பியழகம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ்(33). பெயிண்டர். இவரது அக்காவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ்(32) என்பவருக்கும் கூடாநட்பு இருந்துள்ளது. இது தொடர்பாக ஜெகன்ராஜுக்கும், மதன்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல், நேற்று இரவு ஜெகன்ராஜ், மதன்ராஜ் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மதன்ராஜை, ஜெகன்ராஜ் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து ஜெகன்ராஜை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மதன்ராஜ் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி மின் மயானம் அருகே இறக்கி விட்டார். அத்துடன் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெகன்ராஜை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த வடவள்ளி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மதன்ராஜைத் தேடி வந்தனர். அவரை இன்று காலை தேனி அருகே போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT