மௌசுமிக்கு நடந்த மறுமணம்.
மௌசுமிக்கு நடந்த மறுமணம். 
தேசம்

50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

காமதேனு

தனது 50 வயது தாய்க்கு மகள் மறுமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருக்கும் மௌசுமிக்கும் 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு டெப்ஆர்த்தி(2) என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் மூளை ரத்தக்கசிவால் சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் மருத்துவராக இருந்ததால் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மௌசுமி தனது 2 வயது மகள் டெப் ஆர்த்தியை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். ஆசிரியையான மௌசுமி தனது மகளை அன்போடு வளர்த்தார். தற்போது டெப் ஆர்த்திக்கு 25 வயதாகிறது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள பிரபல நிறுவனத்தில் மேலாளராக டெப் ஆர்த்தி பணிபுரிந்து வந்தார். அப்போது ஆஜ்தக் என்பவர் நண்பராக பழகியுள்ளார். அப்போது 50 வயதான தனது தாயை மறுமணம் செய்து கொள்வது குறித்து கேட்டுள்ளார். ஆனால், மௌசுமி இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நான் திருமணம் செய்தால் உன் நிலை என்ன ஆகும் என மௌசுமி திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

தாயுடன் டெப் ஆர்த்தி.

ஆனால், ஆர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி தாயை மறுமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு மறுமணம் நடந்துள்ளது. இனி தாய் கவலையில் இருந்து மீண்டு சந்தோஷமாக இருப்பார் என அவரது மகள் டெப் ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் மௌசுமி திருமணம் செய்த புகைப்படம், தனது மகளுடன் மௌசுமி இருக்கும் புகைப்படம் ஆகியவை வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT