கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை hindu கோப்பு படம்
தேசம்

ஒருபக்கம் குறையும் கரோனா; மறுபக்கம் அதிகரிக்கும் மரணம்

காமதேனு டீம்

இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 மற்றும் சனிக்கிழமை பாதிப்பான 3 லட்சத்து 37 ஆயிரத்து 704ஐ விட குறைவாகும்.

கடந்த 21ம் தேதி அதிகபட்சமாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா டெஸ்ட்

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சத்து 71 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 36 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 162 கோடியே 92 லட்சத்து 9 ஆயிரத்து 308 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT