கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை hindu கோப்பு படம்
தேசம்

இந்தியாவில் 3வது நாளாக குறைந்தது கரோனா பாதிப்பு!

காமதேனு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக பாதிப்பு சற்று குறைந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 3 லட்சத்து 37 ஆயிரத்து 704ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 495 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 162 கோடியே 26 லட்சத்து 7 ஆயிரத்து 516 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT