தேசம்

பயணியை எட்டி உதைத்த நடத்துநர்: வைரல் வீடியோவால் அதிரடி நடவடிக்கை

காமதேனு

கர்நாடகாவில் பேருந்து பயணியை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்ட நடத்துநர் மீது போக்குவரத்து கழகம் அதிடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கர்நாடக மாநிலம் தென்கன்னட மாவட்டத்திற்குட்பட்ட ஈஸ்வரமங்களா நகரின் சந்திப்பிற்கு அரசு பேருந்து நேற்று வந்தது. அப்போது ந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது நடத்துனர் அந்த பயணியைத் தடுத்தார். அத்துடன் பயணியின் கையில் இருந்து குடையைப் பிடுங்கி சாலையில் வீசினார். ஆனாலும், பயணி பேருந்தின் படிக்கட்டில் ஏறினார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர், பயணியின் மார்பில் எட்டி உதைத்தார். இதனால் அந்த பயணி பேருந்தில் இருந்து தலைக்குப்புற சாலையில் விழுந்தார். இதை அங்கிருந்து பயணிகள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் இன்று விசாரணை நடத்தியது. அப்போது, பயணியிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர் நடத்துநர் சுப்புராய் என்பது தெரிய வந்தது.. மேலும் அந்த பயணி குடிபோதையில் இருந்ததால் அவரை பேருந்தில் ஏற நடத்துநர் மறுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுப்புராயை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பயணியின் மருத்துவச் செலவை கேஎஸ்ஆர்டி.சி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT