யூடியூப்
யூடியூப் twitter
தேசம்

35 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு!

காமதேனு

நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், பொய் செய்திகளையும் பரப்பியதாக கூறி 35 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளது மத்திய அரசு.

உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்கள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 2 ட்விட்டர் கணக்குகள் மற்றும் ஒரு பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த கணக்குகள் என்று உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டதாகவும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களுடன் இயங்கும் இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT