இறப்பு
இறப்பு 
தேசம்

தேசியக்கொடியை ஏற்ற இரண்டாவது மாடிக்குச் சென்ற இளைஞர்: நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

காமதேனு

பெங்களூருவின் ஹென்னூர் பகுதியில் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்தபோது இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

33 வயதான விஸ்வாஸ் குமார் எனும் மென்பொருள் பணியாளர், ஹென்னூரில் உள்ள குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்தார். அவர் நேற்று தேசியக் கொடியை ஏற்றுவதற்காக மொட்டை மாடிக்குச் சென்றார். அப்போது தேசியக் கொடியை கம்பத்தில் கட்ட முயன்றபோது இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இந்த சோகமான சம்பவம் பிற்பகல் 1.45 மணியளவில் நடந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விஸ்வாஸ் குமாரும் அவரது பெற்றோரும் கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்தவர்கள். விஸ்வாஸ் தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விஸ்வாஸ் குமாருக்கு மனைவியும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

SCROLL FOR NEXT