தேசம்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா; ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவி: வைரலாகும் வீடியோ

காமதேனு

சென்னை மின்சார ரயிலில் ஆபத்தான முறையில் அரசு பள்ளி மாணவி ஒருவர் பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மிக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரலானது.

அந்த வீடியோவில், சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஓடி வந்து ஏறுகின்றனர். அப்போது அரசு பள்ளி மாணவி ஒருவர், ரயில் படிக்கட்டில் நின்றவாறு கால்களை நடைமேடை முடியும் வரை தேய்த்தவாறு ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கிறார்.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் இந்த காட்சிகளை எடுத்து பதிவிட்டுள்ளார். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்குப் போட்டியாக பள்ளி மாணவி ஒருவரின் ஆபத்தான முறையில் பயணம் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்கள் மீது ரயில்வே காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT