குளியல் அறையில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்த 9 மாதக் குழந்தை, தாய்: நடந்தது என்ன?
குளியல் அறையில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்த 9 மாதக் குழந்தை, தாய்: நடந்தது என்ன?
தேசம்

குளியல் அறையில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்த 9 மாதக் குழந்தை, தாய்: கேரளாவில் பயங்கரம்

காமதேனு

கேரளத்தில் வீட்டுக் குளியல் அறையில் தாய், தன் 9 மாதக் குழந்தையுடன் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியூட்டி உள்ளது. தன் மகள், பேரக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறந்தப் பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் புத்தந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ ஜோசப்டின்சி. இவரும் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்த அஞ்சு(23) என்பவரும் காதலித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்தத் தம்பதிக்கு டேவிட் என்னும் ஒன்பது மாதக் குழந்தையும் இருந்தது.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது, அஞ்சு, தன் மகன் டேவிட் உடன் வீட்டுக் குளியல் அறையில் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகாமை வீட்டுக்காரர்கள் வீட்டில் சென்றுபார்த்தபோது அஞ்சுவும், அவரது மகன் டேவிட்டும் தீயில் கருகி சடலமாகக் கிடந்தனர். இதுகுறித்து கடினங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் உயிரிழந்த அஞ்சுவின் தந்தை பிரமோத் கடினங்குளம் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “ராஜூ ஜோசப்டின்சிக்கு வேறு சில பெண்களோடு தொடர்பு இருந்தது. அதுகுறித்து அஞ்சு, ராஜூவிடம் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் தான் என் மகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளாள். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் மகள் கோழை அல்ல. இதனால் என் மகள் சாவில் மர்மம் உள்ளது” எனப் புகார் கொடுத்துள்ளார்.

ஒன்பதுமாத குழந்தையுடன் தாய் குளியல் அறையில் கருகிய நிலையில் கிடந்த இச்சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

SCROLL FOR NEXT