தேசம்

கார் மோதி உயிரிழந்த மூவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

காமதேனு

ராணிப்பேட்டை மாவட்டம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, எஸ்ஆர் கண்டிகை மின்னலம்மாள் கோயில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் ( 45) மற்றும் அங்கு சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த உண்ணாமலை ( 45), கன்னியப்பன் ( 65) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT