தேசம்

கண்முன்னே பறிபோன உயிர்கள்; சடலம் முன்பு கதறிய நண்பன்: வடமாநில இளைஞர்களுக்கு நடந்த துயரம்

காமதேனு

வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்த வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்த சோக சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம். வி.காட்டு கிராமத்திற்கு வட மாநில தொழிலாளர்கள் நேற்று இரவு வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். காட்டு பிரிங்கியம் என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் மீது மோதினர். இதில் நிலை குலைந்து அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த டிப்பர் லாரி இரண்டு பேர் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் உயிர் தப்பினார். தன் கண்முன்னே இரண்டு பேர் சடலமாக கிடந்ததைப் பார்த்து நண்பர் கதறி அழுதார்.

தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் விபத்தில் உயிரிழந்தவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபு என்றும் பிஹாரைச் சேர்ந்த ராஜு என்பதும் தெரிய வந்தது. இதனிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்த வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT