வாழ்க்கை

24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கரோனா!

காமதேனு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,096 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியாவில் புதிதாக 1,096 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,447 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 81 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,24,93,773 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5,21,345 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT