சர்வதேசம்

டுவின் டவரை தாக்கிய மின்னல்: பிரமிக்க வைத்த காட்சி!

காமதேனு

மலேசியாவில் இடியுடன் கூடிய பலத்த மழையின் போது அங்குள்ள இரட்டைக்கோபுரத்தை(Twin Tower) மின்னல் தாக்குவது போன்ற புகைப்படங்கள் ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது.

மலேசியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அங்குள்ள இரட்டைக்கோபுரத்தை தாக்குவது போன்று மின்னல் தோன்றியுள்ளது. இந்த காட்சி அடங்கிய புகைப்படம் ட்விட்டரில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இது உண்மையான நிகழ்வா அல்லது ஃபோட்டோ ஷாப் செய்யப்பட்டதா என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இந்த புகைப்படம் உள்ளதாக பலரும் பதிவிட்டுள்ளனர். மலேசியாவில் இது போன்று மின்னல் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வழக்கமானது தான் பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT