சர்வதேசம்

கட்டுக்குள் வருகிறதா கரோனா? உலக அளவில் பாதிப்பு என்ன?

காமதேனு

உலக அளவில் கரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தாலும், அந்த அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால், கரோனா கட்டுக்குள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக அளவில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 99 லட்சத்து 86 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 571 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரஸால் இதுவரை 58 லட்சத்து 80 ஆயிரத்து 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97,797 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,080 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,707 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 496 பேர் மரணமடைந்துள்ளனர். அதே போல பிரேசிலில் ஒரே நாளில் 1,29,266 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் குறைந்த அளவே ஏற்படுகிறது. இதனால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் இந்த வைரஸுக்கு விரைவில் முடிவுகட்ட முடியும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

SCROLL FOR NEXT