ஜுவான் விசென்டே 
சர்வதேசம்

கின்னஸில் இடம் பெற்ற உலகின் மிக வயதானவர் மரணம்... வயது 114 தான்!

காமதேனு

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே தனது 114 வயதில் மரணம் அடைந்துள்ளது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜுவான் விசென்டே

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா.  இவர் கடந்த 1909 மே மாதம் 27-ம் தேதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். அவரது பெற்றோருக்கு மொத்தம் 10 குழந்தைகள். அதில்  இவர் 9-வது குழந்தையாக பிறந்தார். 
கடந்த 2022-ம் ஆண்டில் இவருக்கு 112 வயதானபோது  உலகின் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காராக மாறினார். அதை அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் வெனிசுலாவே இதைக் கொண்டாடியது. தற்போது அவருக்கு 114 வயதாகிறது.  இந்தநிலையில் உடல்நலக்குறைவால் பெரெஸ் மோரா நேற்று மரணம் அடைந்தார். 

ஜுவான் விசென்டே

இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக் குழந்தைகள் மற்றும் 30 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். இவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் நாட்டினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு அதிபர் நிகோலஸ் மதுரோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டினர் பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT