ஹாட் லீக்ஸ்

திரௌபதிக்குப் பின்னால் ஒரு திட்டமிருக்கு!

காமதேனு

கடந்த முறை, உபி மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின பிரநிதியான ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக்கியது பாஜக. இது உபியில் கணிசமாக உள்ள பட்டியலின மக்களின் வாக்குகளை தங்களுக்குச் சாதகமாக திருப்ப கைகொடுத்ததாக பெரிதும் நம்புகிறதாம் பாஜக தலைமை. அதே கணக்கை இப்போதும் கையில் எடுத்திருக்கிறார்கள். தற்போது குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக தேடிக் கண்டுபிடித்து நிறுத்தி இருக்கும் திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தைச் சேந்த பழங்குடியின தலைவர் ஆவார். இவரை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கேயும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முடியும் என கணக்குப் போடுகிறார்களாம் பாஜக தலைகள்.

SCROLL FOR NEXT