க்ரைம்

தங்கக் கடத்தல் வழக்கில் திகுதிகு திருப்பம்: குருவியுடன் சேர்ந்து கொள்ளையடித்த காவலர் கைது

காமதேனு

குருவியுடன் சேர்ந்து தங்கக் கடத்ததில் ஈடுபட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.10 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குருவி ஆனந்த்ராஜ் மற்றும் அவரது உறவினர்களான மைக்கல்ராஜ், ஷியாம்குமார், ஆகியோரை கடந்த 10ம் தேதி ஒரு கும்பல் கடத்தி வந்து அரும்பாக்கத்தில் உள்ள விடுதி ஓன்றில் அடைத்து வைத்து கடத்தல் தங்கத்தை கேட்டு சித்தரவதை செய்தனர்.

பின்னர் விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 3 பேரை மீட்டு கடத்திலில் ஈடுபட்ட இதயதுல்லா, பாலகன், திமுக நகர துணை செயலாளர் ரவிகுமார், தினேஷ், நவீன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

இதனையடுத்து குருவி ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கிண்டியை சேர்ந்த விமல், வினோத், ஸ்ரீதர் ஆகிய மூன்று பேரை கைது செய்து 10 லட்சம் பணம் மற்றும் திருடிய தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்களுள் விமல் என்பவர் மவுண்ட் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதும், விமானத்தில் தங்கம் கடத்தி வரும் குருவிகளை சென்னை விமான நிலையத்திலிருந்து விமல் போலீஸ் எனக்கூறி அவர்களை சோதனை செய்யவிடாமல் வெளியே அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதே போல ஆனந்த ராஜ் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, விமான நிலையத்தில் இருந்து ஆனந்தராஜை கிண்டிக்கு அழைத்து சென்று மைக்ரோ ஓவனில் இருந்த தங்கத்தை விமல் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் வினோத், ஸ்ரீதர் ஆகிய இருவர் காவலர் விமலுக்கு உதவியாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவலர் விமல், வினோத்,ஸ்ரீதர் மூவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT