க்ரைம்

பெற்றோர் கண்டிப்பு!- உயிரை மாய்த்த மாணவன்

காமதேனு

பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடங்குளத்தில் நடந்துள்ளது.

கூடங்குளம் மேற்கு உரக்குழி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவருடைய மகன் சுமன் ராஜ் (14). இவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர் வீட்டில் உள்ள தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சுமன் ராஜ் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT