செல்போன் 
க்ரைம்

அதிர்ச்சி... ஃபேஸ்புக்கில் வெளியான 21 வயது இளம்பெண்ணின் நிர்வாண வீடியோ!

காமதேனு

குஜராத்தில் பக்கத்து வீட்டு 21 வயது இளம்பெண்ணின் நிர்வாண வீடியோ, புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வாலிபர் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்

குஜராத் மாநிம், சூரத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், பாண்டேசரா காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதில் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷிவ்குமார் மவுரியா என்ற வாலிபர் போலியான தனது நிர்வாண வீடியோ மற்றும் பல புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அத்துடன் நிர்வாணமாக உடல் முழுவதையும் வீடியோவில் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் எனது தந்தையைக் கொன்று விடுவேன் என அவர் மிரட்டியதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மவுரியா வீட்டின் அருகே வசிக்கும் இளம்பெண் ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிவது தெரிய வந்தது. கடந்த ஆண்டு மவுரியாவுடன் அவர் நட்புடன் பழகியதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரும் தங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

உடனே மவுரியா அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதுடன், வாட்ஸ் அப் செய்திகளை அனுப்பத் தொடங்கினார். இதை இளம்பெண் கண்டித்துள்ளார். இந்த நிலையில், தனது ஆசைக்கு இணங்குமாறு இளம்பெண்ணை மவுரியா மிரட்டத் தொடங்கினார். ஆனால், அதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு அந்த இளம்பெண்ணின் பெயரில் ஃபேஸ்புக் கணக்கை மவுரியா தொடங்கி அதில் அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த படங்களை அகற்ற வேண்டும் என்றால், உடல் முழுவதையும் நிர்வாணமாக வீடியோவில் காட்ட வேண்டும் என்று மிரட்டியுள்ளார். ஆனால், அதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், சித்தரிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் மவுரியா வெளியிட்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அந்தப் பெண் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று தாக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து மவுரியா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சூரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT