2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தப்பியோட்டம்
2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தப்பியோட்டம் 
க்ரைம்

2 குழந்தைகளைக் கொன்ற சவரத் தொழிலாளி... என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸார்!

காமதேனு

உத்தர பிரதேசத்தில் முன்விரோதம் காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான சவரத் தொழிலாளியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் சிகை அலங்கார கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் ஆயுஷ், பியூஷ் மற்றும் ஹனி ஆகிய மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த சஜித் (22) என்பவருக்கும் வினோத்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

போலீஸாரின் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சஜித்

இந்த நிலையில் நேற்று மாலை வினோத் குமாரும் அவரது மனைவியும் வீட்டின் கீழே உள்ள கடையில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த சஜித், 11 வயது ஆயுஷ் மற்றும் ஆறு வயது பியூஷ் ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஹனியின் கழுத்தை அறுக்க முயன்ற போது அவர் அலறி துடித்தார். இதனால் சத்தம் கேட்டு வினோத்குமாரும், அவரது மனைவியும் மேலே ஓடி வந்து பார்த்துள்ளனர். இதனால் சஜித் அங்கிருந்து தப்பியோடினார். வினோத்குமாரும் அவரது மனைவியும் பார்த்த போது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் கூடியுள்ள மக்கள்

உடனடியாக இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தப்பி ஓடிய சஜித்தை, போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள வீடு ஒன்றில் சஜித் பதுங்கி இருப்பதாக அறிந்த தகவலை அடுத்து போலீஸார், இன்று காலை அங்கு சென்றனர். அப்போது போலீஸாரை நோக்கி சஜித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT