அமிர்தவள்ளி  
க்ரைம்

அதிர்ச்சி... கணவனின் தங்கை மகனுக்கு மகளை கொடுக்க மறுப்பு; மனைவி வெட்டிக்கொல்லப்பட்ட கொடூரம்

காமதேனு

மகளின் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில்  மனைவியை மண்  வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (49). தச்சுத் தொழிலாளியான இவருக்கு 44 வயதான அமிர்தவள்ளி என்ற மனைவியும், பார்கவி, ஸ்ரீமதி என இரண்டு மகள்களும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர்.

இவரது மூத்த மகள் பார்கவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் ஸ்ரீமதி பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது மகன் வெற்றிவேல் ஐந்தாம் வகுப்பும் படித்து வருகிறார். பழனிவேல், சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால், அடிக்கடி பழனிவேலுக்கும், அமிர்தவள்ளிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  

அமிர்தவள்ளியின் வீடு

இந்நிலையில், பழனிவேல் தனது மூத்த மகளான பார்கவியை தனது தங்கை மகனுக்கு திருமணம் செய்து தர வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இதற்கு அமிர்தவள்ளி சம்மதிக்கவில்லை. இந்நிலையில், வழக்கம் போல் நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த பழனிவேல், அமிர்தவள்ளியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். 

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பழனிவேல், மண்வெட்டியை எடுத்து அமிர்தவள்ளியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அமிர்தவள்ளி வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், பழனிவேல் ஒரத்தநாடு ஸ்டேஷனுக்கு சென்று, தனது மனைவியை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து  ஒரத்தநாடு போலீஸார், அமிர்தவள்ளியின் உடலை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT