தற்கொலை செய்த விவசாயி ராஜு கோட்டாகி 
க்ரைம்

வாங்கிய கடனுக்காக மனைவி, மகனை வீட்டுக்காவலில் வைத்த பெண்... அவமானத்தால் விவசாயி தற்கொலை!

கவிதா குமார்

வாங்கிய கடனுக்காக தன் மனைவி, மகனை வீட்டுக் காவல் வைத்ததால், மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், யமகனமரடி தொகுதியைச் சேர்ந்தவர் ராஜு கோட்டாகி. விவசாயி. இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தவ்வா பையனவரா என்ற பெண்ணிடம் ஒன்றரை லட்ச ரூபாயைக் கடன் வாங்கியிருந்தார்.

பெலகாவி

கடனுக்காக வட்டியை ராஜு செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ராஜுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியால் பயிர்கள் கருகியதால், அவர் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், உடனடியாக கடனைச் செலுத்துமாறு சித்தவ்வா எச்சரித்துள்ளார். கடனைத் திருப்பிச செலுத்த ராஜு இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், சொன்னபடி அவரால் கடனைச் செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், ராஜு, அவரது மனைவி துர்க்கவ்வா, மகன் பசவராஜ கோட்டாகி ஆகிய மூன்று பேரையும் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் கொடுக்காமல் சித்தவ்வா பையனவரா வீட்டுக் காவலில் வைத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஜு கோட்டாகி வீட்டிற்கு வந்து நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகார் கொடுக்க யமகனமரடி காவல் நிலையம் சென்ற போது காலதாமதம் செய்ததுடன், சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கணவனை இழந்த துர்க்கவ்வா மற்றும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT