க்ரைம்

‘எரித்துக் கொன்று விடுவேன்’ - வரதட்சணைக்காக மனைவியை மிரட்டிய கணவர் கைது

முருகன்.ர

கீழக்கரையில் வரதட்சணை கொடுமை செய்து, எரித்துக் கொலை செய்து விடுவேன் என மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் முஹமத் அப்துல் காதர், லுதுபியா பேகம். இவர்களுக்கு கடந்த 2002 செப்.28ல் திருமணம் நடந்தது. அப்போது, 41 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் ரொக்கம், மற்றும் சீர் பொருட்கள் லுதுபியா பேகத்தின் பெற்றோர் கொடுத்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் தொழில் துவங்க பணம் கேட்டு நச்சரித்தார். லுதுபியா பேகம் அணிந்திருந்த நகையை வலுக்கட்டாயமாக வாங்கி முஹமத் அப்துல் காதர் அடமானம் வைத்தார்.

இவருக்கு லுதுபியா பேகத்தின் பெற்றோர் கடை வைத்துக்கொடுத்தனர். இக்கடையை நடத்த மேலும் ரூ.10 லட்சம் பணத்தை லுதுபியா பேகம் தனது பெற்றோரிடம் வாங்கிக்கொடுத்தார்.

மேலும் பணம் கேட்டு முஹமத் அப்துல் காதர், அவரது உறவினர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் லுதுபியா பேகத்தை தாக்கினார். இந்நிலையில் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக்கொலை செய்து விடுவதாக லுதுபியா பேகத்திற்கு மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது குறித்து லுதுபியா பேகம் கீழக்கரை போலீசில் புகார் அளித்தார்.

இதன்படி கீழக்கரை மகளிர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 2 பிரிவுகளின் 5 பெண்கள் உ்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் முஹமத் அப்துல் காதரை, எஸ்ஐ லட்சுமி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிப்.10 வரை ராமநாதபுரம் சிறையில் அடைத்தார்.

SCROLL FOR NEXT